states

img

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து;நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்- ராகேஷ் திகாய்த்

க்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தினுள் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

கலவரத்திற்கு காரணம்  ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தான் என்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்குக் கடந்த பிப். 10 தேதி பிணை வழங்கி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் நீதி வழங்க உத்தரபிரதேச அரசு இப்போது செயல்பட வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.